Call Our Toll-Free Number: 123-444-5555

சீமான்: விஜய் கோபம்!

டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படத்திற்கு கோபம் என்று பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சிகரமான படங்களை ‌எடுத்து வரும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக விஜய் நடிக்கவிருக்கிறார். சிறைக்குள்ளேயை திரைக்கதை எழுதி முடித்து திரும்பியிருக்கும் சீமான்,


படத்தின் டைட்டிலை கோபம் என வைத்துக் கொள்ளலாமா? என்று நாயகன் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். காவலன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத கோபத்தில் இருக்கும் விஜய்யும், கோபம் என்ற தலைப்புக்கு டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் பகலவன் விரைவில் கோபம் என்று மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிகின்றன. அ‌தேநேரம் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தில் இருந்து விலகி, படத்தை கை மாற்றி விட துடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. தாணு விலகினாலும் கோபத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம் விஜய்யும், சீமானும்! 

0 comments:

About

Contact Details