Call Our Toll-Free Number: 123-444-5555

நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை lol....


நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.
தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.
அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.
நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா.

0 comments:

About

Contact Details